நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? இன்று விறுவிறு வாக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

நாகாலாந்து, மேகாலயா ஆகிய 2 மாநிலத்தின் 5 ஆண்டுகால பதவிக்காலம் முறையே மார்ச் 12, மார்ச் 15 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. இதனையடுத்து 2 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (பிப்ரவரி 27-ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மேலும்,  மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் 60  தொகுதிகளை கொண்ட நாகலாந்து மாநிலத்தில் 59 தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில், சோகியாங் எனும் சட்டசபை தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் பாஜக கடந்த முறை தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருந்த நிலையில், தற்போது தனித்து போட்டியிடுகிறது. இம்முறை, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளும் போட்டியிடுகின்றது.

 அதேபோல், நாகாலாந்து மாநிலத்தில் பாஜக 20- என்டிபிபி 40 என்ற கணக்கில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 23 - என்.பி.எப். 22 இடங்களிலும் போட்டியிடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nagaland and Meghalaya Assembly election polling today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->