ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்.!!
mk stalin meet governor
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளடித்து. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் அமர உள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார்.
இதனிடையே நேற்று மலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், 125 திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின். ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதம், அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் மு.க.ஸ்டாலின். சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் வழங்கினார்.