சூடுபிடிக்கும் அரசியல் களம்: பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும்  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. 

தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார். 

இதனை அடுத்து அமைச்சர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வகையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதவி ஸ்டாலின் நாளை தேனியில் பிரசாரம் செய்ய உள்ளார். 

இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே பிரசாதம் நடத்தப்படுவதாக திமுக வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நாளை இரவு பிரசாரத்தை தொடர்ந்து தேனியில் தங்கும் உதயநிதி ஸ்டாலின், மறுநாள் தேனி அல்லிநகரம், பெரியகுளம் போன்ற இடங்களில் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்வார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி கூட்டணி வேட்பாளருக்கும் வாக்கு சேகரிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister Udayanidhi Stalin tomorrow election campaign


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->