என்ன!!! அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆபத்தா? ஹோட்டல் மேலே ட்ரோன் பறந்ததால் பரபரப்பு..!
Minister Amit Shah danger There stir drone flies over hotel
மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் ''அமித்ஷா'' அவர்கள் ஓய்வெடுத்த ஓட்டல் பகுதியில் எதிர்பாராமல் திடீரென டிரோன் பறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுத்தொடர்பாக காவலர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்,மதுரை ஓத்தக்கடை பகுதியில் இன்று மாலை பா.ஜ.க. தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் 15000 -க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்காக பிரமாண்ட முறையில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மேலும், வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ''அமித்ஷா'' நேற்றிரவு விமானம் மூலம் மதுரைக்கு வந்து சேர்ந்தார்.இதில் விமான நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார்.
மேலும், அமித்ஷா வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தடையை மீறி டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் காவலர்களும், பாதுகாப்பு படையினரும் அதிர்ச்சியடைந்தனர். இதுத் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Minister Amit Shah danger There stir drone flies over hotel