ஈரோட்டில் ம.தி.மு.க. மாநில பொதுக்குழு கூட்டம்! நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற உள்ள அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கட்சிகள் இப்போதே செயல் திட்டங்களைத் தீட்டிவருகின்றன. இதில், ம.தி.மு.க.வும் தனது அரசியல் யுத்தத்திட்டங்களை வடிவமைக்கத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ம.தி.மு.க.வின் 31-வது மாநில பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் நடைபெற உள்ளது. பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் கூட்டத்தைத் தலைமைத்துவிக்கிறார்.

பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மாநிலம் முழுவதும் இருந்து வரும் 1,700 பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

காலை 11:30 மணிக்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதன் பின்னர், வைகோ மற்றும் துரை வைகோ உரையாற்றவுள்ளனர். இதில், கட்சியின் எதிர்கால வளர்ச்சி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதியம் 3.30 மணிக்கு வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூட்டத் தீர்மானங்கள் குறித்து விளக்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MDMK GM Vaiko


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->