தடைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகட்டும்...! - விநாயகர் சதுர்த்தி திருநாளில் தமிழக மக்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து...! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தியும், அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டும் பக்தர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கும், விநாயகரை வழிபடும் பக்தர்களுக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விநாயகர் சதுர்த்தி திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நன்னாளில் தொடங்கப்படும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் தடைகள் நீங்கி சிறப்பாக நிறைவேறட்டும்.

ஒவ்வொரு இல்லத்திலும் புதிய நம்பிக்கைகள் துளிர்விட்டு, மகிழ்ச்சி, மனநிம்மதி, அமைதி மற்றும் வளம் பெருகட்டும்.மக்களின் மனதில் நிறைந்திருக்கும் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறி, அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியை நோக்கி முன்னேறட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் அனைவருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

May obstacles be removed and happiness increase Chief Minister Joseph Vijay wishes people Tamil Nadu occasion Vinayagar Chaturthi


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->