#BREAKING : சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை தி.நகர் பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று மதுபாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து. தகவல் அறிந்த துணை ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், பாஜக தலைமை அலுவலத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for throwing petrol bomb at BJP headquarters in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->