காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க எச்.ராஜாவுக்கு உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
Madras High Court H raja BJP thiruparankundram
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், மதமோதலைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவிற்கு எதிராக மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து, எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், விசாரணைக்காக அனுப்பப்படும் காவல்துறை நோட்டீசுகளை எதிர்த்து நேரடியாக வழக்குத் தொடர முடியாது என்றும், காவல்துறைக்கு தேவையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றும் எச். ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.
இதற்குடன், காவல்துறை நோட்டீசை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
English Summary
Madras High Court H raja BJP thiruparankundram