சனாதன ஒழிப்பு பேச்சு: உதயநிதிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
Madras HC Slams Udhayanidhis Sanatana Speech Quashes Case Against Amit Malviya
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சு தொடர்பாக, பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துக்கள்:
இனப்படுகொலைக்குச் சமம்: "ஒழிப்பு" (Eradication) என்ற சொல் ஒரு மதத்தைக் குறிக்கும்போது, அது அந்த மதத்தைப் பின்பற்றும் மக்களே இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும். இது ஒருவிதமான இனப்படுகொலை (Genocide) அல்லது கலாச்சாரப் படுகொலையே ஆகும்.
80% மக்களுக்கு எதிரானது: சனாதனத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சு என்பது இந்தியாவில் வாழும் 80% இந்துக்களுக்கு எதிரானது. இது அப்பட்டமான வெறுப்புப் பேச்சு (Hate Speech) என நீதிபதி எஸ். ஸ்ரீமதி சுட்டிக்காட்டினார்.
எதிர்வினையே தவிர குற்றமல்ல: அமைச்சரின் வெறுப்புப் பேச்சுக்கு அமித் மாளவியா அளித்தது ஒரு எதிர்வினை மட்டுமே. வெறுப்புப் பேச்சைத் தொடங்குபவர்களை விட்டுவிட்டு, அதற்குப் பதிலளிப்பவர்கள் மீது சட்டத்தைப் பயன்படுத்துவது வேதனையானது.
வரலாற்று உண்மைகளைத் தெளிவுபடுத்திய நீதிமன்றம்:
அரசு தரப்பு குறிப்பிட்ட தலைவர்கள் சனாதனத்திற்கு எதிரானவர்கள் அல்ல என நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது:
மகாத்மா காந்தி - தன்னை ஒரு 'சனாதன இந்து' என்று அவரே பிரகடனப்படுத்திக் கொண்டவர்.
காமராஜர் - முருகப் பக்தர்; ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
புத்தர் - இந்து குடும்பத்தில் பிறந்தவர்; சைவ சமயத்தின் தியான முறைகளைப் போதித்தவர்.
ராமானுஜர் & வள்ளலார் - சனாதன தர்மத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள்.
பெரியார் ஒருவரைத் தவிர மற்ற எவரும் சனாதனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மேலும், காவல்துறை அரசியல் சார்புடன் செயல்படுவதைக் கண்டித்த நீதிமன்றம், அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
English Summary
Madras HC Slams Udhayanidhis Sanatana Speech Quashes Case Against Amit Malviya