திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. குஷ்பூ பகிரங்க குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் கொடுமைப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னையில் கோவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டிலேயே ஒரு பெண்ணுக்கு கொடுமை நேர்ந்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பகிரங்கமாக குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khushboo alleged Women not in safe in DMK govt


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->