அதிமுகவை ஒன்றிணைக்க இறங்கிய முக்கிய புள்ளி.! வெளியான அறிவிப்பு.!!
KC Palanisamy new announcement
அதிமுக தற்போது பல அணிகளாக பிரிந்துள்ளது. டிடிவி தினகரன் அணி, சசிகலா அணி, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ பன்னீர் செல்வம் அணி என அதிமுக பல அணிகளாக பிரிந்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் எம்ஜிஆர் ஆதரவாளர்கள் அணி ஒன்றும் உள்ளது.
இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்க அதிமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே சி பழனிசாமி இறங்கியுள்ளார். இதற்காக அவர் சென்னை வடபழனியில் பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள டிஜே மினி ஹாலில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டத்தை கூட்டுகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் எதிர்காலம், தொண்டர்களின் உரிமை பாதுகாத்தல், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒற்றை தலைமை, லஞ்ச ஊழல் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் எழுதிய உயிலின்படி படி அவரது தொண்டர்களால் மட்டுமே தலைமை முடிவு செய்யப்பட்டு அதிமுக வழிநடத்தப்பட வேண்டும். ஒன்றிணைத்த அதிமுகவை உருவாக்குவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
KC Palanisamy new announcement