''ராகுல் எங்கள் தலைவர்; தோல்வி குறித்து அவர் கவலை கொள்ளவில்லை: அவருக்கு ஊக்கம் கொடுத்துள்ளோம்''; கர்நாடக முதல்வர் சித்தராமையா..! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதல்வர் சித்தராமையா டெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் மத்திய அரசின் உதவியை நாடி அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சனிக்கிழமை (இன்று) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அமைச்சரவை மாற்றம் குறித்து எங்கள் அமைச்சர்கள் யாரும் எதுவும் பேசவில்லை என்றும், பிரதமர் மோடியை இன்று நான் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், பிஹார் தேர்தல் காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை எனவும், வரும் திங்கட்கிழமை அன்று அவரை சந்திப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் ராகுல் காந்தியை சந்தித்து, பீஹார் தேர்தல் குறித்து அவருடன் பேசியதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். மேலும், ராகுல்எங்கள் தலைவர். இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஊக்கம் கொடுத்தாகவும், அது குறித்து அவர் கவலை கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன், ராகுலுக்கு உற்சாகத்தை இழக்க வேண்டாம் என ஆறுதல் தெரிவித்ததாகவும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்​நாட​கா​வில் வரும் நவம்​பரில் அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யப்​படும் என அம்​மாநில முதல்​வர் சித்​த​ராமையா மென்னதாக தெரிவித்திருந்தார். ஏனெனில், கர்​நாட​கா​வில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த தேர்​தலில் காங்​கிரஸ் வென்​றதை தொடர்ந்து சித்​த​ராமையா முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அப்​போது முதல்​வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்​கிரஸ் மேலிடம் துணை முதல்​வர் பதவி வழங்​கியமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Chief Minister Siddaramaiah says we have encouraged Rahul


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->