மாமூல் கேட்டு அராஜகம்., அதிமுக பெண் நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


வளையல் கடை நடத்தி வரும் பெண்ணிடம் மாமுல் கேட்டு அராஜகம் செய்த அதிமுக பெண் நிர்வாகியை   காஞ்சிபுரம் காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் சித்திரா என்பவர் வளையல் கடை நடத்தி வந்துள்ளார் கணவனால் கைவிடப்பட்ட அந்த பெண் அந்த கடை வருமானத்தில் தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக மகளிர் அணியின் காஞ்சிபுரம் நகர இணைச் செயலாளர் திலகவதி 50,000 ரூபாய் சித்ராவிடம் கேட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த திலகவதி சித்ராவை சாலைகளில் தள்ளி சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திலகவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanjipuram admk thilakavathi arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->