25-ம் தேதி வரை இந்தியா முழுவதும் வெப்ப அலை...! - வானிலை மையத்தின் அதிரடி எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை தாக்கம் அதிகரிக்க உள்ளதை எச்சரிக்கையாக வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் ஏப்ரல் 20 முதல் 25 ஆம் தேதி வரை வெப்ப அலை தீவிரமாக வீசும் சூழல் உருவாகியுள்ளது.

மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா,டெல்லி, பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்,கிழக்கு ராஜஸ்தான், விதர்பா, சத்தீஷ்கர்,அரியானா, சண்டிகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இடைவிடாமல் வெப்ப அலை தாக்கம் உணரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு வங்காளத்தின் கங்கை கரையோரப் பகுதிகளில், 26 ஆம் தேதி வரை வெப்பத்துடன் கூடிய அதிக ஈரப்பதமான வானிலை நிலவும். இதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 22 ஆம் தேதி வரை கடும் வெப்பமும், ஒட்டுண்ணும் ஈரப்பதமும் மக்கள் வாழ்வை சிரமப்படுத்தும்.

மாஹே, கேரளம், கடலோர ஆந்திரா மற்றும் ஏனாம் பகுதிகளில் 24 ஆம் தேதி வரை, மேலும் குஜராத் கடலோரப் பகுதிகளில் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் வெப்பநிலை அதிகரித்து ஈரப்பதம் கூடிய வானிலை நிலவுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்,அரியானா, சண்டிகார் மற்றும் விதர்பா பகுதிகளில் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் இரவு நேரத்திலும் வெப்பநிலை குறையாமல் அதிகமாகவே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கை, மக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heat wave across India until 25th Meteorological Department emergency warning


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->