சசிகலாவின் விடுதலையால் அதிமுகவில் ஏற்படப்போகும் மாற்றம்.. அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!
kadambur raju press meet about sasikala
புதுக்கோட்டையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ரஜினிகாந்த் நடத்தும் ஆலோசனை கூட்டத்தால் அரசியல் மாற்றம் எதுவும் நடக்காது. வழக்கமான தனது ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினி வழக்கம்தான்.
ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்துவதில் சிறப்பம்சம் ஒன்றுமில்லை. ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பம். நான் கருத்து கூற முடியாது. அதிமுக மாற்றத்துக்கு உள்ளாகும் கட்சி அல்ல. ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்டுக்கோப்பான கட்சி. என்றைக்கும் கட்டுக்கோப்பாக இருக்கும். தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு, அதற்கு எங்களுக்கும் சம்பந்தமில்லை.
சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு இன்னும் முழுமையாக தளர்க்கப்படவில்லை. அரசியல் கூட்டங்களுக்கு இன்னும் இந்தியா முழுவதும் தடை உள்ளது. அப்படி தடை உள்ள நிலையில் திமுக பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் ஆதாயத்திற்காக தான். அரசியல் அராஜகத்துக்கு மொத்த உருவம் திமுக தான் எனக் கூறினார்.
English Summary
kadambur raju press meet about sasikala