மோடி அரசு பிரச்சனைகளை தீர்க்கும் அரசு..பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்துவைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நான் அலுவலகத்தை திறந்து வைக்க வந்தபோது, பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாகவும் தொண்டர்கள் நிறைந்ததாகவும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக நாட்டை மாபெரும் சக்தியாக முன்னோக்கிக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாட்டிலுள்ள தொழிலாளிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்காக ஒவ்வொரு பாஜக தொண்டர் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பிரச்சினைகளை தீர்க்கும் அரசு நாட்டுக்கு புதிய திசையையும் தொலைநோக்கு பார்வையும் வழங்கும் அரசு.

பரவால்ல நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு தலா 5 கிலோ கோதுமை அரிசி ஒரு கிலோ பருப்பு வழங்கும் பணியை மத்திய அரசு செய்துள்ளது. முன்பு இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது ஆனால் தற்போதைய மிகப் பெரிய ஏற்றுமதி மையமாக மாறி வைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

JP Natta speech about BJP Modi government


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->