ஜார்க்கண்டில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 

இந்த தேர்தலைப் பொறுத்தவரை பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையேயான போட்டியாக தேர்தல் களம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. 

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் படி பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. 

மொத்தம் 81 தொகுதிகள் பெரும்பான்மைக்கு 41 தொகுதிகள் தேவை. 

என்டிடிவி கருத்து கணிப்பு:

பா.ஜ.க. கூட்டணி: 42-47 தொகுதிகள், இண்டியா: 25-30 தொகுதிகள், இதர கட்சிகள் : 1-4 தொகுதிகள் 

நியூஸ் 18 கருத்துக்கணிப்பு:

பா.ஜ.க. கூட்டணி: 47 தொகுதிகள், இண்டியா: 30 தொகுதிகள், இதர கட்சிகள் : 4 தொகுதிகள்

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு:

பா.ஜ.க. கூட்டணி: 40-44 தொகுதிகள், இண்டியா: 30-40 தொகுதிகள், இதர கட்சிகள் 1 தொகுதி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jharkhand assembly election 2024 exit poll result


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->