நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்புத் தொழுகை.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி, நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

இப்ராஹிம் நபி, இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு தன் மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்தார். இவரது  தியாகத்தைப் போற்றும் வகையில், தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சௌதி அரேபியாவில் சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர், அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jag organized special prayer in Nagore beach


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->