பாஜகவுக்கு ஆதரவு தந்த இஸ்லாமிய குடும்பத்தை கொடூரமாக தாக்கிய இஸ்லாமியர்கள்.!
islam people attack islam family for bjp support
உத்தராகண்ட் : ருத்ராபூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பூத் பங்களா காலனியை சேர்ந்த அனீஸ் மியான் - பர்வீன் ஜகான், மகள், மகன் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தற்காக, அக்கம்பக்கத்தினரால் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்
கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக அமோக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளித்த ஒரு குடும்பத்தின் மீது இஸ்லாமிய குடும்பத்தின் மீது இஸ்லாமியர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உதம்சிங் நகர் மாவட்டம், ருத்ராபூரில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பூத் பங்களா பகுதியை சேர்ந்த அனீஸ் மியான் (பாஜக நிர்வாகி), அவரின் மனைவி பர்வீன் ஜகான் இவரது 16 வயது மகள் மற்றும் 15 வயது மகன் ஆகியவர்களை, அவர்கள் வீட்டின் அருகில் வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளனர்.
பாஜக நிர்வாகி மனைவியான பர்வீன், அவரின் மகளுக்கு அரிவாள் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான 4 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பந்தம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாஜக நிர்வாகி தெரிவிக்கையில், பாஜகவுக்கு ஆதரவாக நாங்கள் தேர்தலில் செயல்பட்டதால் தான் நாங்கள் தாக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
islam people attack islam family for bjp support