கூட்டணிக்குள் புதுக் கணக்கா...? திமுகவுக்கு ஜோதிமணி எம்.பி. விடுத்த ஓபன் அழைப்பு...! - பின்னணி என்ன...?
Is it new account within alliance Jyothimani MP open invitation DMK What background
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இந்தியா கூட்டணியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,"பொதுவாக இந்தியா கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள அரசியல் கட்சிகளுக்கே அழைப்பு வழங்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால் அந்த நிலை உள்ளது.

எதிர்காலத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப அவர்கள் கூட்டணி நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.இந்தியா கூட்டணியில் தி.மு.க. தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பமாக உள்ளது. நாட்டின் ஜனநாயக நலன் மற்றும் அரசியல் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு, கருத்து வேறுபாடுகளை பின்தள்ளி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து பயணித்த கூட்டணிக் கட்சிகள், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டவுடன் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியல் பண்பாடாக இருக்காது. நேற்று வரை பாராட்டியவர்களை இன்று எதிரிகளாக சித்தரிப்பதும் பொருத்தமற்ற அணுகுமுறையாகும்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுடனும் தேர்தல் களத்தில் போட்டியிட்ட சூழல்கள் இருந்தன. ஆனால் தேசிய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் அவர்கள் இந்தியா கூட்டணியின் அங்கமாக இணைந்துள்ளனர்.
அதேபோல், அரசியல் முதிர்ச்சியும், பரந்த நோக்கமும் கொண்ட அணுகுமுறை தமிழகத்திலும் உருவாக வேண்டும். மாநில அரசியலைத் தாண்டி நாட்டின் எதிர்கால நலனை முன்னிறுத்தும் ஒற்றுமை மனப்பான்மை அவசியம் என ஜோதிமணி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Is it new account within alliance Jyothimani MP open invitation DMK What background