இந்து தர்மத்தில் ஒரு அதிகார மையத்தை எதிர்க்கிறோம்.!! - ராகுலின் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி வடகிழக்கு மாநிலத்தை தொடங்கி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்டார். இந்த பாதயாத்திரையின் நிறைவு விழா மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிறைவு விழாவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். 

இந்த நிறைவு விழாவில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி "இந்திய நீதிப்பயணத்தை முடக்க மத்திய அரசின் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டனர். நாம் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகத்தான போராடுகிறோம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அது உண்மையல்ல. இந்து தர்மத்தில் ஒரு அதிகார மையம் உள்ளது, அதற்கு எதிராகத்தான் நாம் போராடுகிறோம்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India alliance opposed Hindu Dharmas single point


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->