அரசு புதிய முடிவு!இனி பெண் விடுதிகளில் பெண் காவலர்கள் நியமிக்கப்படுவர்...! - அமைச்சர் கீதா ஜீவன்
Governments new decision From now female guards appointed womens hostels Minister Geetha Jeevan
சென்னையில் அமைச்சர் கீதா ஜீவன், தாம்பரம் அருகே அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு காரணமாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வன்கொடுமை செய்த விடுதி காவலர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்த கீதா ஜீவன் இதைத் தடுக்க இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிட்டதாவது," அரசு விடுதி காவலராலேயே நடந்த இந்த சம்பவத்தை ஏற்கவே முடியாது.இதுவரை காவலர் மேத்யூ மீது எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை. இதுவே முதல்முறை.வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் குற்றச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலராலேயே அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை.விடுதி வார்டன் விடுப்பில் சென்றநிலையில் காவலாளி அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது. தைரியமாக மாணவி குற்றஞ்சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஆண்கள் ஈடுபடுவதை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.அன்னை சத்யா இல்லம் உள்ளிட்ட பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து இல்லங்களிலும் பாதுகாப்பிற்கு பெண் காவலர்கள் நியமிக்கப்படுவர்.தாம்பரம் அருகே அரசு விடுதியில் மாணவியிடம் காவலாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரையடுத்து அரசு புதிய முடிவு எடுத்துள்ளது"என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Governments new decision From now female guards appointed womens hostels Minister Geetha Jeevan