புத்தக கண்காட்சியில் குலுக்கல் முறையில் புத்தகம் பரிசு பெற்ற பள்ளி மாணவி!
A school student who received a book as a prize through a lucky draw at the book exhibition
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மே-21 முதல் ஜூன் - 9ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.இதில் பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திட பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தினசரி ஒரு மாணவரை தேர்வு செய்து ரூ1000 மதிப்புள்ள மாணவர் விரும்பிய புத்தகங்களை பரிசாக வழங்கப்படுகிறது. இதில் கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளி 4ம் வகுப்பு மாணவி வினோதினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா,இந்தியா பசுமை இயக்க தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புத்தக விற்பனையாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவி வினோதினிக்கு ரூ1000/- மதிப்புள்ள புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
இதில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆவுடையப்பன்,ராஜபாண்டி, காளிராஜ் உள்பட பெற்றோர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் புத்தக விற்பனையாளர் முரளி நன்றி கூறினார்.
English Summary
A school student who received a book as a prize through a lucky draw at the book exhibition