புத்தகப் பிரியர்களுக்கு நற்செய்தி! ரெயில் நிலையத்தில் புத்தகப் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர்...!
Good news for book lovers Chief Minister inaugurated a book park at railway station
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை திறந்து வைத்தார்.
மேலும் இந்த சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை பார்வையிட்டார்.
அங்கு 10000 புத்தகங்கள் இடம்பெறும் வகையில் இந்த புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதனை அதிகளவில் மக்களும் பார்வையிட்டனர்.
English Summary
Good news for book lovers Chief Minister inaugurated a book park at railway station