#BREAKING | சாட்சியம் சொல்லும் போதே மயங்கி விழுந்த சுவாதி - கோகுல் ராஜ் வழக்கில் திடீர் திருப்பம்! - Seithipunal
Seithipunal


சேலம் : ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த வழக்கில், கைதான பத்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், ஐந்து பேரை விடுதலை செய்தும் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிறழ்சாட்சியாக ஆஜரான சுவாதியிடம், வழக்கு தொடர்பான வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டுக்காட்டி நீதிபதிகள் பல்வேறு கேள்;விக்கலை எழுப்பினர்.

அப்போது சுவாதி அந்த வீடியோவில் வருவது நான் தானா என ஞாபகம் இல்லை என்றும், அது கோகுல் ராஜ் போல் இருப்பதாகவும் தெரிவிக்க, உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், வாழ்க்கையில், நியாயம், தர்மம், சத்தியம் முக்கியம் என சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர். உங்கள் புகைப்படத்தை பார்த்து நீங்களே தெரியவில்லை என்று சொல்கிறீர்கள். இதை எப்படி ஏற்பது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விசாரணையில் சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அப்போது உண்மையை கூறுமாறு சுவாதியிடம் தெரிவித்தனர்.

பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாட்சியம் அளித்து வரும் சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பிறழ்சாட்சியான சுவாதியிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியதால் அவர் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சுவாதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gokulraj case hc divition 25112022


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->