எம்.ஜி.ஆர் சிலை சேதம்.. கொந்தளிக்கும் தமாகா தலைவர் ஜி கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து இது போன்ற செயல் இனியும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சை வடக்கு வீதியில் உள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் சிலையை உடைக்க முயற்சி செய்து, பிறகு சிலையை பெயர்த்து தூக்கி வீசியதும் தெரியவருகிறது.தமிழக அரசு இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டறிய வேண்டும். அவர்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள பல்வேறு சிலைகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழக அரசு, தற்போது சேதப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிலையை உடனடியாக சரிசெய்து அதே இடத்தில் வைத்து, இனிமேலும் இது போன்ற செயல் நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan statement for mgr statue damage


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->