இவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தால், தமிழகத்திலே ஊழல் அறவே இருக்காது.. ஜி கே வாசன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கொடுத்த வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

மேலும், நாட்டின் முக்கியமான தூண் நமது மரியாதைக்குரிய பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்கள்தான்.சமீபகாலமாக அரசுக்கு எதிராக  எங்களை போன்ற எதிர்க்கட்சிகள் வைக்கும் கருத்துக்கள் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடையவில்லை என்கிற வருத்தம் எங்களை போன்ற எதிர்க்கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் இருக்கிறது.

உங்கள் மூலமாக வெளியுலகத்திற்கு பொதுமக்களுக்கும் எங்களுடைய கருத்துக்கள் சென்றடைந்தால் தான் ஆட்சியாளர்களிடம் வெளிப்படை தன்மை இருக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் நான் கூறுகிறேன் உங்கள் பணியை சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார் தமிழகத்திலே ஊழல் அறவே இருக்காது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gk vasan press meet gor press


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->