நாளைக்கு ரிசல்ட்.. இன்னைக்கு எஸ்கேப்.. சிங்கப்பூருக்கு பறந்தார் குமாரசாமி..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸூக்கு சாதகமாக வந்துள்ளது. மேலும் பாஜகவும், மஜதவும் பெரும் பின்னடைவை சந்திக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு சில செய்தி நிறுவனங்கள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி திடீரென சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் திடீரென அவர் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்று இருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குமாரசாமிக்கு சாதகமாக வராததால் அவர் மனவருத்தம் அடைந்துள்ளதாகவும், மன உளைச்சலில் இருப்பதாகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் ஆட்சி அமைக்க மஜதவின் ஆதரவு தேவைப்படும் என்பதால் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் குமாரசாமிக்கு தூது விட்டுள்ளனர். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Karnataka CM Kumaraswamy visits Singapore


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->