காங்கிரஸுக்கு ‘அக்னி பரீட்சை’ – கூட்டணி முடிவால் கட்சிக்குள் பிளவு அபாயமா?எந்த பக்கம் இண்டிகேட்டர் போட்டாலும் சிக்கல் தான்! - Seithipunal
Seithipunal


2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல், காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய சவாலாக மாறியுள்ளது. பல மாநிலங்களில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தமிழகத்தில் தான் தன்னுடைய அரசியல் நிலையை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. ஆனால் கூட்டணி முடிவு குறித்த விவகாரம் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகால அரசியல் நகர்வுகளைப் பார்க்கும்போது, தமிழக வெற்றி கழகம் (தவெக) உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு பேசப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் தலைமை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தயாரித்த தொகுதி மதிப்பீட்டு அறிக்கை ராகுல் காந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கூட்டணி தொடர்பான ஆலோசனைகளுக்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் சென்னை வரலாம் என்றும், அவர் தவெக தலைவர் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு நடந்தால், தமிழக அரசியலில் புதிய கூட்டணி உருவாகும் சாத்தியம் குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு தசாப்தங்களாக திமுக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ், இம்முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு நல்ல வெற்றி பெற்றது இந்த கோரிக்கைக்கு ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.

ஆனால் கூட்டணி குறித்து கட்சிக்குள் ஒருமித்த நிலை இல்லை என கூறப்படுகிறது. ஒரு பகுதி தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். மறுபுறம், அரசியல் மாற்றம் தேவை என்ற கருத்தில் உள்ள சில நிர்வாகிகள் தவெக கூட்டணியை ஆதரிக்கின்றனர் என தகவல்.

காங்கிரஸ் எந்தக் கூட்டணியைத் தேர்வு செய்தாலும், அதன் விளைவாக கட்சிக்குள் பிளவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். திமுக கூட்டணியில் இருந்து விலகினால், தற்போதைய சில எம்.எல்.ஏ.க்கள் தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. அதேபோல், திமுகவுடன் தொடர்ந்தால் மாற்றத்தை விரும்பும் தரப்பு புதிய கட்சி முயற்சியில் ஈடுபடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு, எதிர்கால அரசியல் செல்வாக்கு ஆகியவை காங்கிரஸின் அடுத்த முடிவை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. வரவிருக்கும் தலைமை மட்ட பேச்சுவார்த்தைகள் தமிழக காங்கிரஸின் எதிர்கால திசையை தீர்மானிக்கக்கூடியவை என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

2026 தேர்தலில் காங்கிரஸ் எப்படிப் போட்டியிடும்? எந்தக் கூட்டணியில் இருக்கும்? என்ற கேள்விகளுடன், கட்சியின் உள்நிலை ஒருமைப்பாடு தக்கவைக்கப்படுமா என்பதும் முக்கியமான அரசியல் விவாதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire test for Congress Is the alliance decision a risk of division within the party


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->