வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்...! மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு யார் யார் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டு மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேர் மாற்றப்படுவார்கள்.

ஆகையால்,அதற்கான தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து,  தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மீதமுள்ள ஒரு இடம், மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியுள்ளது. அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.இச்சுழலில்,நேற்று அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்பதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி:

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது," அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 19-ந் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்திருந்தது.

இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இது வரும் 4 ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Filing of nominations begins today Do you know who is contesting the Rajya Sabha elections


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->