BigBreaking | எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு ஆபத்து.! வெளியான அதிர்ச்சி செய்தி.!
eps safty issue admk
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களால் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, டிஜிபி அலுவலகத்திற்கு இணைய வழியில் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் மனு அளித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை அதிமுகவிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்,எடப்பாடி கே பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றவுடன் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது வட தமிழகம் மற்றும் கொங்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், டிஜிபி அலுவலகத்திற்கு இணைய வழியில் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அப்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபர்களால், எடப்பாடி கே பழனிசாமியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்