இது என்ன "உங்க வீட்டு பணமா?".. கதிர் ஆனந்தை விளாசிய எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன இடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதிக்காக வாக்கு சேகரித்தார். 

அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி "வேலூர் உட்பட வட மாவட்டங்களின் ஜீவநதியாக இருக்கும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிகளை எதிர்க்க இந்த திமுக அரசுக்கு திராணியில்லை. 

தமிழக அரசால் வழங்கப்படும் திட்டங்களால் பயன்பெறும் பெண்களை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கொச்சைப்படுத்தி பேசுகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பவுடர், பேரன் லவ்லி, லிப்ஸ்டிக் போட்டுன்னு பல பலன்னு வந்திருக்கீங்க என கிண்டலாக பேசியிருப்பது பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

அவர் என்னமோ அவர் வீட்டு சொந்த பணத்தை கொடுத்தது போல ஏளனமாக கேலி கிண்டல் செய்யும் வகையில் பேசி இருப்பது திமுகவின் குணம் இந்த குணத்தை மாற்றவே முடியாது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது அனைத்து மகளிர்க்கும் மாதம் தறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவ்வாறு திமுக அரசு வழங்காததால் அதனை நம்பி வாக்களித்த தாய்மார்கள் ஒருவர் தற்போது தன்னை நிராகரித்தது ஏன் என மு க ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. 

மு க ஸ்டாலின் அவர்களின் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இனி உங்கள் பொய்களும் பித்தலாட்டங்களும் எடுபடாது. மக்கள் விழித்துக் கொண்டார்கள், இனி பிழைத்துக் கொள்வார்கள்" என பிரச்சார மேடையில் ஆபாசமாக பேசி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS response KathirAnand criticism on women


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->