"சவக்குழிக்கே சென்றுவிட்ட தமிழ்நாடு".. மு.க ஸ்டாலினை சாடிய எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


மருது சேனை நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவது என தனது நிலைப்பாட்டினை தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மருது சீனை கட்சியின் நிறுவன தலைவர் ஆதிநாராயணன் சென்று கொண்டிருந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மற்றும் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் "மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மருதுசேனை கட்சியின் நிறுவனர் திரு. ஆதிநாராயணன் அவர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பெட்ரோல் குண்டு வீசி கொலைமுயற்சித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனங்கள்.

இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி, அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி கண்டித்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.

சவக்குழிக்கே சென்றுவிட்ட தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுத்து, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS condemned trying gun shoot on athinaranayan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->