தமிழக நகராட்சித் துறையில் ஊழல் முறைகேடு; சிக்கிய முக்கிய அதிகாரிகள்; அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள அமலாக்கத் துறை கடிதம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்​தில் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யின்​கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட அரசு ஒப்​பந்​தங்​கள் மற்​றும் பணி நியமனங்​களில் பெரும் முறை​கேடு​கள் மற்​றும் ஊழல் நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டி​யிருந்​தது. 

இது குறித்து ஏற்கனவே, அமலாக்​கத் துறை தமிழக அரசின் தலை​மைச் செய​லா​ளர், டிஜிபி மற்​றும் லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு 02 முறை கடிதங்​களை அனுப்பியுள்ளது. அதன்படி, அரசு ஒப்பந்​தங்​களைப் பெறு​வதற்​காக டெண்​டர்கள் முறை​கேடாக கையாளப்​பட்​டுள்ளதாகவும், அதில் ஒப்​பந்​தத் தொகை​யில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்​ச​மாக வசூலிக்​கப்​பட்​ட​தாக குற்​றம் ​சாட்​டப்​பட்​டுள்​ளது. 

அத்துடன், இந்த தொகை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் திரட்​டப்​பட்​ட​தாக​வும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த லஞ்​சத் தொகை​யின் நேரடி பயனாளி​களாக திமுக கட்​சி​யைச் சேர்ந்த சில தலை​வர்​கள் இருந்​துள்ளதாகவும், அந்த நிதி அவர்​களுக்கு சென்​ற​தாக​வும் அமலாக்​கத் துறை அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ள​தாக தகவல்கள் ​வெளியாகின.

இந்​நிலை​யில், குறித்த டெண்​டர் முறை​கேட்​டில் புதிய திருப்பமாக சில ஐஏஎஸ் மற்​றும் ஐபிஎஸ் அதி​காரி​களும் தொடர்​புடைய​வர்​களாக இருக்​கலாம் என்று அமலாக்​கத் துறை தனது சமீபத்​திய கடிதத்​தில் அதிர்ச்சி தகவலை குறிப்​பிட்​டுள்​ளது. 

அதில், குறிப்பாக கவி பிர​சாத், டி.ரமேஷ், கே.என்.மணிவண்​ணன், பிரபு உள்​ளிட்​டோர் இந்த ஊழல் செயல்​பாடு​களில் முக்​கிய பங்​காற்​றியுள்ளதாக கூறப்​பட்​டுள்​ளது. இவர்​களின் செல்​போன்​களில் இருந்து கைப்​பற்​றப்​பட்ட உரை​யாடல்​கள் முக்​கிய ஆதா​ரங்​களாக இருப்​ப​தாக​வும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு அமைச்​சர்​களுக்கு சாதக​மாக டெண்​டர் நிபந்​தனை​களை மாற்​றியமைப்​ப​தில் சில ஐஏஎஸ் அதி​காரி​கள் துணை நின்​ற​தாக​வும் அந்த கடிதத்​தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை மாநக​ராட்​சி​யின் தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கான சீருடை கொள்​முதல் ஒப்பந்​தத்தை குறிப்​பிட்ட ஒரு​வருக்கு பெற்​றுத் தரு​வதற்​காகவும், அடிக்​கடி சர்ச்​சை​யில் சிக்​கும் ஒரு இளம் ஐபிஎஸ் அதி​காரி இடைத்​தரகரை தொடர்​பு​கொண்​ட​தாக​வும், இதற்​கான ஆதா​ரங்​கள் இருப்​ப​தாக​வும் அமலாக்​கத்துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அதி​காரி ரகசிய மற்​றும் சென்​சிட்​டிவ் தகவல்​களை மூன்​றாம் நபர்​களு​டன் பகிர்ந்​த​தாக​வும், இது இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​துக்கு முரணான செயல் எனவும் கூறப்​பட்​டுள்​ளது. அத்துடன், இது குறித்து தனிப்​பட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றும் அமலாக்​கத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், வசூலிக்​கப்பட்​டதாகக் கூறப்​படும் லஞ்​சத் தொகை உள்​நாடு மற்​றும் வெளிநாடு​களுக்கு ஹவாலா முறையில் சட்​ட​விரோத​மாக பரி​மாறப்பட்​ட​தாக​வும் கூறப்பட்டுள்ளது. இந்த விவ​காரம் தொடர்பாக தமிழக காவல்​துறை உடனடி​யாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசா​ரணை தொடங்க வேண்டும் என்​று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஆதா​ரங்​கள் இருந்​தும் நடவடிக்கை எடுக்​கத் தவறி​னால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களும் பொறுப்​பேற்க வேண்​டிய நிலை ஏற்​படும் என்​றும் அந்தக் கடிதத்​தில் அமலாக்கத் துறை எச்சரித்துள்ளது. மேலும், நகராட்சி நிர்​வாகத் துறை​யில் நடந்துள்​ள​தாகக் கூறப்​படும் இந்த முறை​கேடு விவ​காரத்​தில் உயர்​மட்ட அதி​காரி​கள் பெயர் வெளி​யாகியுள்ளமை அரசி​யல் வட்டாரங்​களில்​ ​அதிர்​ச்சியை ஏற்​படுத்​தியுள்​ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Department letter that key officials are also involved in the municipal administration department corruption


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->