நெருங்கும் தேர்தல் - ஒரு நபர் எத்தனை மதுபாட்டில்களைக் கொண்டுச் செல்லலாம்?
election restriction of liquor bottles
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுடன், வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன.
அதில் ஒன்றான தேர்தல் நேரத்தில் அதிக அளவில் பணமும் மதுவும் சப்ளை செய்யப்படுகிறது. இது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நபர் இரண்டு முதல் மூன்று மது பாட்டில்கள் வரை எடுத்துச் செல்லலாம் என்ற விதிகள் மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டவையே. சில மாநிலங்களில் சீல் செய்யப்பட்ட மது பாட்டில் அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வேறு மாநிலத்தில் இருந்து ஒரே ஒரு சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மட்டுமே கொண்டு வர முடியும். இதற்கு மேல் கொண்டு வந்தால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
English Summary
election restriction of liquor bottles