கட்சியும், சின்னமும் யாருக்கு சொந்தம்? என்.சி.பி வழக்கில் தேர்தல் ஆணையம் விசாரணை!
Election Commission of India investigation in NCP case
காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 1999 ஆம் ஆண்டு பிரிந்த மூத்த அரசு தலைவர் தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியின் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பாவாரின் உறவினரும் முக்கிய தலைவருமான அஜித் அவார் தனது ஆதரவாளருடன் மாநில ஆளும் சிவசேனா பாஜக கூட்டணியில் இணைந்து அம்மாநில துணை முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.
இதனால் தேசிய வங்க காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் உரிமை கொண்டாடி அஜித் பவாரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். மேலும் சரத் அவரின் மகளும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுக்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இரு தரப்புகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் டெல்லி அலுவலகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. இதற்கிடையே வாக்காளர் கட்சியின் சின்னத்தை மட்டும் நம்பி வாக்களிக்கவில்லை என தெரிவித்திருந்த நிலையில் இன்று தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்று அடைந்தார் சரத் பவார் .
அதேபோன்று அஜித் பவார் தரப்பில் பிரபல வழக்கறிஞர் மகேஷ்ஜெத் மாலானி மற்றும் மனிந்தர் சிங் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு ஆஜராகினர். இரண்டு ஆணையர்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
English Summary
Election Commission of India investigation in NCP case