துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கும் முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காரைக்குடியில் இருந்து புறப்பட்டு திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் செய்கிறார். 

மாலையில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி ,கயத்தாறில் பிரச்சாரம் செய்கிறார். இரவு அங்கிருந்து நாகர்கோவிலுக்கு சென்று தங்குகிறார். நாளை காலையில் நாகர்கோவில், தேவாளை, ஆரல்வாய்மொழி, பனங்குடி, நாங்குநேரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். 

மதியம் ஒரு மணிக்கு திருநெல்வேலி செல்கிறார். அங்கு இருந்து கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக தேனி மாவட்டம் செல்கிறார். இதையடுத்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதிக்கு சென்று அவரை ஆதரித்து நாளை மாலை 5.30 மணிக்கு பிரச்சாரம் செய்கிறார். பின்னர் மதுரை வந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

edappadi palanisamy tomorrow election campaign for theni


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->