போச்சு.. மதிமுகவுக்கு சின்னம் கிடைப்பதில் சிக்கல்.. ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்.!!
ECI response madrashc mdmk contest 2seats symbol will allocate
கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு வழங்கப்பட்டிருந்த பம்பரம் சின்னத்தை இதில் ஒரு மக்களவைத் தேர்தலில் மீண்டும் தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென மதிமுக பொதுச் சயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது.

இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்த போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னத்தை மதிமுகவிற்கு வழங்கப்படும் என பதிலளித்துள்ளார்.
இதற்கு மதிமுக திறப்பு எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து இந்த வழக்கின் விசாரணை பிற்பகலுக்குப் பிறகு தொடரும் என நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். இதனால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
English Summary
ECI response madrashc mdmk contest 2seats symbol will allocate