திமுகவினர் முன்பே.. செத்தாலும் எங்க சின்னத்தில் தான் போட்டி.!! - கெத்தாக சொன்ன துரை வைகோ.!!
Durai vaiko confidantly Said he contest in own symbol
திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி மற்றும் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என் நேரு, ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய துரை வைகோ "தந்தைக்கு தலைகுனிவு வரக்கூடாது என்று தன் அரசியலில் நுழைந்தேன். வேறு வேட்பாளரை கூட நிறுத்துங்கள் ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது.
செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோமே தவிர உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்" என உணர்ச்சி பொங்க கெத்தாக பேசினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த திமுக அமைச்சர்களின் முகம் வாடியது.
திருச்சி தொகுதி கூட்டணி கட்சியின் மதிமுகவுக்கு ஒதுக்கியதில் கட்சியினருக்கு விருப்பமில்லாத சூழலில் வேட்பாளர் துரை வைகோ இவ்வாறு பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Durai vaiko confidantly Said he contest in own symbol