இந்தியாவில் சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், உறுதிப்பாடும்  ஈடு இணையற்றவை - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


சமூகநீதி பயணத்தை இன்னும் வேகமாக முன்னெடுக்க உறுதியேற்போம் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க  ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் இன்று.  

இந்தியாவில்  சமூக நீதியை பாதுகாக்க  அவர் செய்த தியாகங்களும்,  அவர் காட்டிய உறுதிப்பாடும்  ஈடு இணையற்றவை!

தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை.  

அதற்கான சமூகநீதி பயணத்தை இன்னும் வேகமாக முன்னெடுக்க சமூகநீதிக் காவலர் விபிசிங்  பிறந்த நாளில் உறுதியேற்போம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Say About v p Singh


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->