பாமகவினர் எதிர்பார்த்த அந்த ஒரு அறிவிப்பு : தலைமை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாமகவினர் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட உள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.

தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

தேர்தல் பரப்புரை விவரம் வருமாறு:

13.02.2022   ஞாயிற்றுக்கிழமை - சென்னை மாநகரம்
14.02.2022   திங்கட்கிழமை -     காஞ்சிபுரம் மாவட்டம்
15.02.2022   செவ்வாய்க்கிழமை - சேலம் மாவட்டம்
16.02.2022   புதன்கிழமை - தருமபுரி மாவட்டம்

அதன்படி, இன்று சென்னை மாநகராட்சியில் மொத்தம் 102 பெண் வேட்பாளர்களையும், 98 ஆண் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். 

இதற்காக மயிலாப்பூர் மாங்கொல்லையில் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 

மேலும், இந்தப் பொதுக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின்தேர்தல் அறிக்கையை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Anbumani Ramadoss CHENNAI Election Manifesto 2022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->