காங்கிரசிடம் நாட்டை ஒப்படைத்து விடாதீர்கள் - பிரதமர் மோடி!!
Don't hand over the country to the Congress
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியில் பிரச்சரத்தில் பேசிய பிரதமர் மோடி, உங்கள் ஒட்டு நாட்டை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாற்றும். உங்கள் ஒட்டு என்னை வலுப்படுத்தும். இந்தியாவை உற்பத்தி மையமாகவும், ஆற்றல் மையமாகவும் மாற்றுவதே எங்களின் குறிக்கோள்.எக்காரணம்கொண்டும் காங்கிரசிடம் நாட்டை ஒப்படைத்துவிடாதீர்கள் என்று பேசினார்.
English Summary
Don't hand over the country to the Congress