#சற்றுமுன் || சென்னை மாநகராட்சி முடிவு அறிவிப்பு.! 14 மாநகராட்சியை கைப்பற்றிய திமுக.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 101 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் திமுக சென்னை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. தற்போதுவரை சென்னை மாநகராட்சியில் அதிமுக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

மேலும், ஈரோடு மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 32ல் திமுக கூட்டணி வெற்றிபெற்றதன் மூலம், ஈரோடு மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. அதிமுக 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 

இதேபோல், திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணி 37ல் வெற்றிபெற்று திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது.

ஆவடி மாநகராட்சியையும் திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக-28, அதிமுக-2, சுயேட்சை - 1 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது.

கரூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் 40ல் திமுக வெற்றி; அதிமுக 2 வார்டுகளில் வெற்றிபெற்று உள்ளது.

மேலும், கும்பகோணம், சேலம், சிவகாசி, திண்டுக்கல், தஞ்சை, கரூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், கடலூர், திருச்சி மாநகராட்சிகள் திமுக வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK VICTORY ELECTION 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->