திமுக எம்.பி.,க்கு கொரோனா தொற்று உறுதியானது.! மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அதிகரித்து கொண்டே கொரோனா பாதிப்பு, மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளாலும், மக்களின் ஒத்துழைப்பாளாலும் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் என்பதால், தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்த கொரோனாவின் தாக்குதலுக்கு பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஆளாகி வருகின்றனர். இதில் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தும் உள்ளனர்.

இந்த நிலையில், நாமக்கல் மக்களவை தொகுதி எம்.பி., ஏகேபி சின்ராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, எம்.பி., சின்ராஜ் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk mp affected corona


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->