ஸ்டாலினை சங்கடப்படுத்திய உடன்பிறப்புக்கள்.! கொண்டாடிய திமுகவினர்., திண்டாட வைத்த காவல்துறை.!
DMK members broked govt rules
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருப்பதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டமும் அடங்கும். இந்நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி திமுக ஒன்றிய துணைச் சேர்மன் கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றார்.
திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும், ஊராட்சி ஒன்றிய துணை தலைவராகவும் இருப்பவர் குணசேகரன். கடந்த 19ஆம் தேதி அவருக்கு 50 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவை மாதர்பாக்கம் அருகே இருக்கும் மாந்தோப்பு ஒன்றில் அவர் கொண்டாட எண்ணி அரசு அலுவலர்கள், திமுகவின் நட்பு வட்டாரங்கள், திமுக உடன்பிறப்புகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து குணசேகரன் உள்ளிட்ட 15 பேருக்கு பாதிப்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் குணசேகரன் மற்றும் சிலரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய குணசேகரன் தலைமறைவாகிவிட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
DMK members broked govt rules