நேற்று சென்னை, தஞ்சை., இன்று மதுரை.! துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நேற்று சென்னை, தஞ்சை மாவட்ட திமுக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று மதுரை மாநகர் மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். துரை முருகன் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், 

"மதுரை மாநகர் மாவட்டம், கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், மதுரை மாநகர் வடக்கு - மதுரை மாநகர் தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதன்படி,

மதுரை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் - பொன்.முத்துராமலிங்கம் நியமிக்கப்படுகிறார். மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்,

மதுரை வடக்கு
மதுரை தெற்கு

மதுரை மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் - கோ.தளபதி நியமிக்கப்படுகிறார். மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்,

மதுரை மத்தியம்
மதுரை மேற்கு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk madurai districts split


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->