ஈரோடு கிழக்கில் பரபரப்பு.. நாதக நிர்வாகியின் மண்டையை உடைத்த திமுகவினர்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோன்று அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 80 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோன்று காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேகனாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பிரிவை சேர்ந்த அன்பு தென்னரசுவின் மண்டையை திமுக நிர்வாகிகள் உடைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மண்டையை உடைத்த திமுக நிர்வாகிகளை கைது செய்யக்கோரி 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக சீமானை கைது செய்யக்கோரி திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK executives broke Ntk executive shull in Erode East


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->