உதயநிதி வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு., பெருத்த ஏமாற்றத்தில் உடன்பிறப்புகள்.!
dmk election campaign cancel nivar effect
தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக கட்சிகள் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் திமுக தீவிர களப்பணி மற்றும் இணைய விளம்பரங்களை மேற்கொண்டு வருகிறது.
திமுகவின் இளைஞரணி தலைவர் பதவியில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், 100 நாள் பிரச்சார பயணத்தை நாகையில் உள்ள திருகுவளையில் இருந்து துவங்கினார். அனுமதி இல்லாமல் தேர்தல் பரபரப்புரை கூட்டம் நடத்தியதாக அவர் தொடர்ந்து 3 நாட்களாக கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி, "நிவர் புயல் காரணமாக திமுக தேர்தல் பிரச்சார பயணம் நவ.28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. மீண்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நவ.28 ஆம் தேதி பிரச்சார பயணம் தொடங்கும்" என்று அறிவித்துள்ளார்.
English Summary
dmk election campaign cancel nivar effect