நாள் குறித்த துரைமுருகன்.! ஒன்று கூடும் மாவட்டங்கள்.! வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். 

திமுக சார்பில் திமுகவினர் மட்டுமே பங்கேற்கும் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது திமுகவின் தேர்தல் பிரச்சார உத்தியாக திமுகவினர் கருதுகின்றனர். இந்த கூட்டங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் மக்களின் குறைகளையும் நேரடியாக கேட்டுப் பெறுகிறார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், 

"மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 21-01-2021 வியாழக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில ” நடைபெறும். 

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்." என்று அந்த அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK district heads meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->