திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை.. கே எஸ் அழகிரி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி ஆர் பாலு, டிகேஎஸ் இளங்கோவன், கே என் நேரு, கனிமொழி, ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ், ரன்தீப் சுர்ஜிவாலா, கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை பிறகு காங்கிரஸ் கட்சியின் கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். 

அக்கட்சியின் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதாவது, அறிவாலயத்தில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தலைமையுடன் கலந்து பேசிய பின்னர் திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk congress alliance meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->